சாத்தூரில் பிரபல ரவுடி என்கெளன்டரில் சுட்டுக்கொலை- மனைவி தற்கொலை
சாத்தூரில் தலைமை காவலர் நாகரத்தினம் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி குமார் என்பவரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
குமார் ஒரு பிரபல ரவுடி ஆவார். சாத்தூர்- கோவில்பட்டி சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்காட்டில் பதுங்கி இருந்த குமாரைப் பிடிக்க தனிப்படை போலீசார் சென்றபோது, போலீசாரை குமார் தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தகவலை அறிந்ததும் குமாரின் மனைவி சோலையம்மாள் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
சோலையம்மாள் - குமார் தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குமார் கொல்லப்பட்டதும், அவரது மனைவி ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் கண்ணீர்ப் பேட்டி
தற்கொலை செய்து கொண்ட சோலையம்மாளின் அண்ணன் முத்துப் பாண்டி கூறுகையில், வீட்டில் சண்டை என்று கூறி எனது தங்கை வீட்டிற்கு வந்தார். அவரிடம் எனது தாயார் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் வீட்டுக்கு வந்தேன்.
பின்னர் அறைக்குள் போனார் சோலையம்மாள். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தோம். அப்போது எனது தங்கை மயங்கிக் கிடந்தார். அவர் விஷம் குடித்திருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார் என்றார் கண்ணீருடன்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை













Click it and Unblock the Notifications