எம்.இ, எம்.டெக் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.5,000 உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயநிதி கல்லூரிகளில் எம்.இ, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கீழ் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.5,000 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.ஆர்க் ஆகிய 5 முதுகலை பட்டப் படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு கல்வி கட்டணத்தை மாற்றுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தாண்டு இந்தப் படிப்புகளுக்கு ரூ. 5000 கூடுதலாக கட்டணம் வசூல் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

வரும் மே 11ம் தேதி நடக்கும் இந்தக் குழுவின் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு முறையாக பரிந்துரைக்கப்படவுள்ளது.

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு கல்வி கட்டணம் ரூ.25,000 ஆகும்.

ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எம்.பி.ஏ. படிப்பிற்கு ரூ. 1 லட்சமும், எம்.சி.ஏ. படிப்புக்கு ரூ.80,000மும், எம்.இ படிப்புக்கு ரூ.60,000மும், எம்.டெக் படிப்புக்கு ரூ.1.4 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்களை ரூ. 5,000 வரை உயர்த்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு பரிந்துரைக்கவுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+