ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு-மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
சென்னை: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை மீது இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் இந்தப் பணிகள் தொடங்கியுளன. இதில், மக்கள் தொகையை மட்டுமே கணக்கிடுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கு வேண்டும். அந்த கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் மனு அனுப்பினோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
எனவே, இது குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர், இயக்குனர் மற்றும் மாநில அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications