ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த சசி தரூர், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை லோக்சபா சபாநாயகர் மீராகுமார் அறிவித்துள்ளார். முன்னாள் ஐ.நா.இணைச் செயலாளரான தரூர், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்டார். அதன் பின்னர் நாடு திரும்பிய அவர் காங்கிரஸில் இணைந்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சமீபத்தில் பூதாகரமாக உருவெடுத்த ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் சிக்கிய இவர், இதற்காக தனது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தரூர் விலகினாலும் கூட வெளியுறவுத்துறை இவரிடமிருந்து விலகாது என்பது போல தற்போது வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications