டெல்லியில் நடைபெறும் தேயிலை ஆய்வுக் கழக நூற்றாண்டு விழாவில் டீ மாத்திரை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாளை தொடங்கும் தேயிலை ஆய்வுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு டீ மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
அஸ்ஸாமின் ஜோர்ஹாத்தில் தேயிலை ஆய்வுக் கழகம் உள்ளது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேயிலை ஆராய்ச்சிக் கழகம் இதுதான். இதன் நூற்றாண்டு விழா நாளை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வரும் பிரதிநிதிகளுக்கு டீ மாத்திரையை அளிக்கவுள்ளனர். இந்த டீ மாத்திரையை தேயிலை ஆய்வுக் கழகமே தயாரித்துள்ளது.
இந்த விழாவை 95 வயதான தினாநாத் பரூவா தொடங்கி வைக்கிறார். இவர்தான் உலகிலேயே மிகவும் வயதான தேயிலை விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications