மும்பை வழக்கின் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைச் செய்தி – ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை மும்பை தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நிரூபித்துள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியாகும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து ப.சிதம்பரம் பதிலளிக்கையில், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது, இந்தியர்கள் சட்டத்தின் ஆட்சியில் உள்ளனர் என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. இது திருப்தி தருகிறது. இரு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கசாப்புக்கு வக்கீல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டார். போதிய வாய்ப்புகளை வழங்கினோம்.மிகச் சிறந்த முறையில் இந்த வழக்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடந்துள்ளது.
இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியாகும். இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் வந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி விட முடியாது என்பதை இந்த செய்தி பாகிஸ்தானுக்கு எடுத்துச்சொல்லும்.
தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications