கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது
சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. இது மே 28ம் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் 15 முதல் மே இறுதிவரை வரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும். குறிப்பாக மரங்கள் அதிகமில்லாத மலை வேலூரில் இருப்பதால் அங்கு அதிகபட்ச வெயிலை உணரமுடியும்.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயிலின் தன்மை குறைவாக காணப்படும்.
ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது. சென்னை , வேலூர் , திருச்சி , மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அக்கினி நட்சத்திரம் தொடங்குகிறது. 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் இது நீடிக்கிறது.