உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

சிபிஐ, காவல்துறை உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளுக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதுகுறித்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அளித்துள்ள ஒரு உத்தரவில், எந்த ஒரு தனி நபரையும், இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு கட்டாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு விருப்பத்திற்கு மாறாக இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்வதன் மூலம் அது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக இதுபோன்ற சோதனைகளை நடத்துவது அரசியல் சட்டத்தின் 20-3வது பிரிவை மீறும் செயலாகும்.
ஒரு வேளை ஒருவரது விருப்பத்திற்கு மாறாக இதுபோன்ற சோதனைகளை நடத்தினாலும் கூட அதன் முடிவுகளை சட்டப்பூர்வமான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications