'நாம் தமிழர் இயக்கம்' அரசியல் கட்சியாக மாற்றம்-சீமான்
சென்னை: நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார் இயக்குனரும் அதன் தலைவருமான சீமான்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ், இனம், மற்றும் தமிழர்களின் உரிமைகளை காப்பதற்காக நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளோம். மே 18ம் ந்தேதி மதுரையில் இன எழுச்சி அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் தொடக்க விழா நடக்கிறது.
ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டம் கடந்த ஆண்டு மே 18ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டம் முடியவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தான் அன்றைய தினத்தில் கட்சியை தொடங்குகிறோம்.
தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. 2016ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.
யார் ஜெயிக்க வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி நிர்ணயிக்கும். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை விட ஆழமாக வேறூன்றுவோம். கட்சியை வளர்ப்பதற்காக திரைப்படங்களை பயன்படுத்த மாட்டேன் என்றார்.
பேட்டியின் போது பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications