ஸ்பெக்ட்ரம் குறித்த கேள்வி-நிருபர்களை தாக்கிய ராஜா ஆதரவாளர்கள்

இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் யூனியன், ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியுள்ளது.
ராஜாவின் கண் முன்னால் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ராஜா சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்திற்கு விரைந்த செய்தியாளர்கள் அவரிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜாவின் ஆதரவாளர்கள் கேள்வி கேட்ட செய்தியாளர்களை அடித்துத் தள்ளி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது.
சமீபத்தில்தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது திமுகவினர் செய்தியாளர்களைத் தாக்கி கேமராக்களை சேதப்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந் நிலையில் ராஜாவின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களைத் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications