கொழும்பு சர்வதேச இந்திப் பட விழாவை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: கொழும்பு நகரில் ஜூன் 3ம் தேதி தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக் கூடாது. அதில் இந்திய நடிகர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி இன்று சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டு முன்பு தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தான் தமிழ் அமைப்புகளின் உணர்வுகளை மதிப்பதாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
சென்னை மெமோரியல் ஹால் முன்னால் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து தமிழர்களைக் காப்போம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது .
இப்படிப்பட்ட ஒரு விழாவை கொழும்புவில் நடத்த முன்வந்திருப்பதன் மூலம் அதன் மீதான போர்க் குற்றம், இனப்படுகொலைக் குற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள சிங்கள அரசைக் காப்பாற்ற இந்த திரைப்படக் கழகம் முன்வந்துள்ளது.
எனவே, இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவிலிருந்து வேறு நகருக்கு மாற்ற வேண்டும், சிறிலங்காவின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிராக அது இழைத்துள்ள குற்றங்களையும் மறைக்க உதவும் எந்த ஆதரவையும் அதற்கு அளிக்கக்கூடாது, தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம் இழைத்த சிறிலங்காவை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை, இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் ராம், இயக்குனர் வெற்றிமாறன், தோழர் தியாகு, தோழர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அறிவரசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications