நாத்தனார் வீட்டில் திருடிய கிறிஸ்தவ போதகர் மனைவி கைது
சுரண்டை: சுரண்டை அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய கிறிஸ்தவ போதகர் மனைவி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ள கீழசுரண்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ரஞ்சிதம். பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே வைத்து விட்டு பக்கத்து வீட்டில் பீடி சுற்ற சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போயிருந்தது.
இது குறித்து சுரண்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாய்லெட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் ஆகியோர் நடத்திய விசாரணையில் ரஞ்சிதம் நகைகளை திருடியது பங்களாசுரண்டையை சேர்ந்த அவரது அண்ணன் ஏசுதாஸ் மனைவி அந்தோணி ரஞ்சிதம் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது நகை திருடியதை ஓப்புக் கொண்டார்.
சுரண்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த அந்த நகையை போலீசார் மீட்டனர். ரஞ்சிதத்தின் அண்ணன் ஏசுதாஸ் கிறிஸ்தவ போதகர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அந்தோணி ரஞ்சிதம் நாத்தனார் ரஞ்சிதம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார்.
அப்போது ரஞ்சிதம் வீட்டில் இல்லாததால் அந்தோணி ரஞ்சிதம் அங்கிருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே தங்கியுள்ளார். அப்போதுதான் பீரோவில் இருந்த நகையை எடுத்து கொண்டு நல்ல பிள்ளை போல் மீண்டும் வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு கம்பி நீட்டியுள்ளார்.
அந்த நகையை வங்கியில் அடகு வைத்து அந்த பணத்தை ஆரம்பரமாக செலவழிக்கவே போலீசில் மாட்டிக் கொண்டார்.












Click it and Unblock the Notifications