போலீஸார் வீட்டுக்கே வந்து புகாரைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாமக
சென்னை: போன் மூலம் யாரேனும் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கேச் சென்று போலீஸார் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று நடந்த உள்துறை மானிய கோரிக்கையின் மீது மணி பேசுகையில்,
இன்றைக்கு குற்றநிகழ்வுகளுக்கு ஏற்பவும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் போலீசாரின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும். 8 மணி நேர பணி வரம்பு, வார விடுமுறை, 8 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பல இடங்களில் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லவே அஞ்சி புகார் செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். புகார் செய்தாலும் வழக்கு பதிவு செய்வதில்லை. புகார் செய்ய சென்றவர் மீதே வழக்கு பதிவு செய்யும் நிலையும் இருக்கிறது.
போன் செய்தால் வீட்டுக்கே சென்று புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யும் ஒரு சீர்திருத்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஏற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாதிரி காவல் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.
சோதனைசாவடி, வாகன சோதனை, நெடுஞ்சாலை ரோந்து சமயங்களில் போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரையே மிரட்டுகிறார்கள். இதில் தவறான புகார் தரும் வழக்கை பதிவு செய்யாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பனின் அண்ணன் மாதையன் எந்த குற்றமும் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
போலீஸ் தேர்வில் ஆண்களுக்கு உயரம் 168 செ.மீ என்பதை 170 ஆகவும் பெண்களுக்கு 157 செ.மீ. என்பதை 159 என்றும் உயர்த்தியதை கைவிட வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications