பெரம்பலூர் சாலை விபத்தில் 3 யாதவ மகா சபை பிரமுகர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

Balu, Rajmohan and Sivakumar
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இன்று காலை 5.30 மணிக்கு நடந்த விபத்தில் யாதவ மகா சபை பிரமுகர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட யாதவ மகா சபைத் தலைவர் ராஜ்மோகன் (50), செயலாளர் பாலசங்கர் (25), தொழிலதிபர் செல்வகுமார் (35) ஆகியோர் உள்பட 6 பேர் சென்னையில் இருந்து ஸ்கார்பியோ காரில் பெரம்பலூர் வந்து கொண்டிருந்தனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 2 கி.மீ முன் உள்ள செங்குளம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இந்த கார் மோதியது.

இதில் ராஜ்மோகன், பாலசங்கர், செல்வகுமார் மற்றும் காரின் டிரைவர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாதவ மகா சபைத் தலைவர் தேவநாதனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிக்க சென்னை சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+