அபுதாபியில் படகில் தூக்குப் போட்டு இந்தியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்டான அபுதாபியில், இந்தியர் ஒருவர் படகில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

35 வயதான அவரது பெயர் காந்தி பேகு தன்டில். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2 வருடங்களாக இவர் அபுதாபியில் வேலை பார்த்து வந்தார்.

ஒரு மீன் பிடி படகின் கேப்டனாக இருந்து வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை படகில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அபுதாபியின் மினா வார்ப் பகுதியில் படகு நின்றிருந்தபோது இந்த் துயரச் சம்பவம் நடந்தது.

பிற்பகலில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் சாப்பிடச் சென்றிருந்தபோது, தற்கொலை முடிவை நிறைவேற்றியுள்ளார் தன்டில்.

தன்டிலுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+