பெரியாறு அணையை உடைக்க 12,000 கிலோ வெடிமருந்தை தயார் செய்துள்ளது கேரளா- வைகோ

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக போராட பொதுமக்களை திரட்டும் பணியில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மதிமுக பொது செயலாளர் வைகோ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மானுரில் நடந்த பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு பிரச்சனைக்காக நாம் சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அதற்கான நதிகளை தேசியமயமாக்க கோரி நான் 1200 கிமீ நடை பயணம் மேற்கொள்வேன். 2006ம் ஆண்டிலேயே முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனால் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் கேரள அரசு சட்டசபையை கூட்டி அணை தங்களுக்குதான் உரிமையுள்ளதாக கூறி வருகிறது.
முல்லை பெரியாறு அணையின் அடிமட்ட அகலம் தற்போது 200 அடியாகவும், 6 அங்குலமாகவும் உள்ளது. அந்த அணையில் கலுங்கு, மதகுகள் இல்லை. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பஞ்சத்தை போக்க இந்த அணையை பொன்னி குயிக் கட்டினார். பெருமைமிக்க அந்த அணையை தற்போது உடைக்க கேரள அரசு முயற்சி செய்து வருகிறது.
இதற்காக 12 ஆயிரம் கிலோ வெடி மருந்தை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 89 ஆயிரம் ஏக்கர் இரு போக விளைநிலங்கள் பாதிக்கப்படும். முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 5 மாவட்டங்கள் அழிந்து போகும். எனவே நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே வரும் மே 28ம் தேதி தண்ணீருக்காக தர்ம யுத்தம் மேற்கொள்ள உள்ளோம். முல்லை பெரியாறு மட்டுமின்றி நெய்யாறு, இடதுகரை சானல் என நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள அரசை கண்டித்து சாலை மறியல் நடத்த உள்ளோம்.
இப்போராட்டம் செங்கோட்டை, களியாக்கவிளை உள்ளிட்ட 13 தமிழக-கேரள எல்லையோர சாலைகளில் நடக்கும். நெல்லை மாவட்ட மக்கள் செங்கோட்டையில் நடக்கும் சாலை மறியலில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் வைகோ.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications