ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் போல் பிற திருமண உதவி திட்டங்களான ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் ஆகியவற்றுக்கும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications