பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 32 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மண்ட்லா & ஹாஜிபூர்: மத்தியப் பிரதேதத்தில் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து பஸ் மீது விழுந்ததில் அதில் பயணம் செய்த 32 பேர் பலியாகிவிட்டனர்.

மண்ட்லா நகருக்கு அருகே கோப்லாபுரா என்ற கிராமத்தில் இன்று இந்த சம்பவம் நடந்தது.

பின்டிரை என்ற இடத்திலிருந்து மண்ட்லாவுக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து உயர் அழுத்த மின்சார போஸ்டின் மீது மோதியது.

இதில் மின்சாரக் கம்பி அறுந்து பஸ் மீது விழுந்ததில் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்த 32 பேர் உடல் கருகி பலியாயினர்.

மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிகார்-லாரியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி:

அதே போல பிகார் மாநிலம் ஹாஜிபூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியினர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வைஷாலி மாவட்டத்தில் 80 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் அந்த லாரி உரசியது.

இதில் லாரியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து லாரி உடனடியாக தீப் பிடித்து எரிந்தது. அதில் லாரியிலிருந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+