பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை
பெரம்பலூர்:
பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.
இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சாதனை மாணவரின் தந்தை சாவு:
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவனின் தந்தை அந்த வெற்றியை அறிய முடியாமல் மாரடைப்பால் காலமானார்.
முதலிடம் பெற்ற மாணவன் பார்த்தசாரதியின் தந்தை சத்தியமூர்த்திக்கு (57) அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட் அவர் 11.30 மணி்க்கு இறந்தார்.
1,179 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார் பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications