புழல் சிறையில் சோலார் செல்போன் - போலீஸார் அதிர்ச்சி

சென்னை அருகே புழலில் ஆசியாவிலேயே அதிநவீன சிறைச்சாலை உள்ளது. இதில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கக் கூடிய இரண்டு மத்திய சிறைகள் மற்றும் பெண்களுக்கான ஒரு சிறப்பு சிறையும் உள்ளது.
இந்த சிறைகளுக்குள் தடையை மீறி செல்போன், கஞ்சா போன்றவை கடத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் செல்போன், சிம் கார்டு, போன்றவைகள் சிக்குகின்றன.
இந்த வகையில் கடந்த வருடம் நடத்தப்பட்ட சோதனையில் 90 செல்போன்கள், 40 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் செருப்புகளிலும், பப்பாளி பழங்களிலும் மறைத்து வைத்து சிறைக்குள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக் 5ல் செல்போனில் சிலர் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் சோதனை நடத்தினர். அதில் பரத் என்ற கைதியிடம் இருந்து அதிநவீன செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த செல்போனுக்கு மின்சார பேட்டரி தேவையில்லை. சூரிய வெப்பத்தினால் இயக்கக் கூடிய செல்போன் என்பது தெரியவந்தது.
இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்ததாக கூறப்படும் புழல் சிறையில் சூரிய சக்தி செல்போன் சிக்கியிருப்பது அதிர்ச்சி அலைகளையும், சிறைக்குள் உள்ள கண்காணிப்பின் தரத்தையம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டிஐஜி துரைசாமி தலைமையில் 500 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்த சோதனை நடைப்பெற்றது.












Click it and Unblock the Notifications