இந்திய அணியின் டுவென்டி 20 சொதப்பல் - பிசிசிஐயிடம் அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

தோல்விகளுக்கான காரணம், பல்வேறு வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கொடுத்த பல ஐடியாக்களை வீரர்கள் செயல்படுத்தத் தவறி விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பவுன்சி விக்கெட்களிலும் ஆடுவதற்கேற்ற பயிற்சிகள் இந்திய அணிக்கு பெருமளவில் தரப்பட வேண்டும் எனவும் இதில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் குறித்து சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களையும் பிஸ்வால் தெரிவித்துள்ளாராம்.
விரைவில் இந்த அறிக்கையைப் பரிசீலித்து முக்கிய முடிவுகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications