நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத் தருமாறு கணவர் கண்ணீர்
பாளையங்கோட்டை சாமாதனபுரம் பேரின்ப தெருவை சேர்ந்த பழ வியாபாரி சகாய ஜார்ஜ். இவரது மனைவி ஆரோக்கிய விமலா. இவர்களுக்கு அருண் பிரகாஷ், அஜய் அண்ட்ரோ ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஆரோக்கிய விமலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது நெல்லை விடுதியில் தங்கியிருந்த சேலம் ஆத்தூரை சேர்ந்த ஓஷோ மணி என்பவர் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து அவரை சந்திக்க சகாய ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.
அங்கு ஓஷோ மணி தன்னை நித்யானந்தாவி்ன் சீடர் என்றும், அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்ப்பேன், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய ஜார்ஜ் தனது மனைவிக்கு அவரிடம் சிகி்ச்சையைத் துவக்கினார். நாளடைவில் ஓஷோ மணி, ஜார்ஜ் வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். ஆரோக்கிய விமலாவுக்கு அக்கு பஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50,000 வரை வாங்கிக் கொண்டார்.
அப்போது நித்யானந்தாவி்ன் பெருமைகளை கூறி விமலாவுக்கு ருத்ராட்ச மாலை ஒன்றை அணிவித்தார். இதையடுத்து நித்யானந்தாவின் தீவிர பக்தையான விமலா வீடு முழுக்க நித்யானந்தாவின் படங்களை வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து ஓஷோ மணியின் வசீகர பேச்சு, நித்யானந்தாவின் கேசட் சொற்பொழிவுகளைக் கேட்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு ஓஷோ மணியுடன் பெங்களூர் ஆசிரமத்திற்கே அழைத்து சென்று விட்டார்.
இந் நிலையில் நித்யானந்தா ஆசிரம பாலியல் லீலைகள் வெளியானசையடு்த்து சகாய ஜார்ஜ், ஓஷோ மணியிடம் போனி்ல் பேசினார். ஆனால், அவர் பிடி கொடு்க்காமல் பேசினார்.
இதையடுத்து மனைவி குழந்தைகளைப் பார்க்க பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சகாய ஜார்ஜ் சென்றார். ஆனால், ஆசிரம நிர்வாகிகளும் நித்யானந்தாவின் சீடர்களும் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் ஓஷோ மணியைத் தேடி சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் அலைந்து திரிந்ததால் அவர் வேதனை அடைந்த ஜார்ஜ் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபஸ் குமார் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்து சென்ற ஓஷோ மணி, மற்றும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்து மனைவி, மகன்களை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
சகாய ஜார்ஜ் ஏற்கனவே 2008ம் ஆண்டும் இதுகுறித்து புகார் செய்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடு்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?













Click it and Unblock the Notifications