போட்டி கட்சியினர் தாக்கி கூர்க்கா தலைவர் தமாங் கொலை: டார்ஜிலிங்கில் கலவரம்
சிலிகுரி: கூர்க்காலாந்து தனி மாநிலம் கேட்டு போராடி வந்த மேற்கு வங்க மாநில அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியின் தலைவர் மதன் தமாங் போட்டிக் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் டார்ஜிலிங் மலைப் பகுதி முழுவதும் பெரும் கலவரம் வெடித்து பதற்றம் நிலவுகிறது.
மதன் தமாங் கட்சியின் மாநாடு இன்று மாலை டார்ஜிலிங் நகரில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட இன்று காலை மதன் தமாங் சென்றார்.
கட்சி மூத்த நிர்வாகிகளும் அவருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் மதன் தமாங்கை வீச்சரிவாளால் கழுத்திலும் வயிற்றிலும் வெட்டினர்.
இதில் மதன் தமாங் படுகாயமடைந்து மயங்கினார். தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.
மதன் தமாங்கின் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சிக்கு எதிராக கூர்க்கா ஜனமோர்ச்சா என்ற கட்சி செயல்பட்டு வந்தது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதுண்டு.
எனவே கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்கள்தான் மதான் தமாங்கை கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மதன் தமாங் கொல்லப்பட்டது அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் டார்ஜிலிங் பகுதி முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
கடைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
டார்ஜிலிங்கில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதையடுத்து அவர்களைக் கலைக்க போலீசார் 4 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
மதன் தமாங்கின் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சி, எதிர்க்கட்சியான கூர்க்கா ஜன மோர்ச்சா இரு கட்சிகளுமே கூர்க்காலாந்து தனி மாநிலம் கேட்டு போராடி வருவவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சி சமீபத்தில் மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி டார்ஜிலிங்கில் இடைக்கால கவுன்சில் ஒன்றை அமைக்க முடிவு செய்தது.
இதற்கு மதன் தமாங் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தோடு இதை விளக்கி பேசவே இன்று மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த மாநாட்டுக்கு கூர்க்கா ஜனமோர்ச்சா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
முதலில் மாநாடு டார்ஜிலிங்கில் உள்ள சவ்ராஸ்டா என்ற இடத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால், கூர்க்கா ஜன மோர்ச்சா கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநாடு பிளாண்டர்ஸ் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications