பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: 7ம் தேதி முடிவு

மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை சில நாட்களுக்கு முன் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மின்சாரத்துக்கான கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
மேலும் டெல்லி, மும்பையில் வாகனங்களுக்கான கேஸ் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது.
இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கிரித் பாரிக் கமிட்டியும் ஏற்கனவே பெட்ரோல், டிசல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு தக்கவாறு அவ்வப்போது மாற்றியமைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100, மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.6ம் உயர்த்தவும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், திட்டக் கமிஷனும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது பெட்ரோல், டீசல் விலையை தற்போது அரசே நிர்ணயித்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசு பெருமளவில் மானியம் வழங்கி வருவதால் அரசுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்று வருவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ரூ.46,000 கோடி இழப்பை சந்தித்தன. இப்போது நாள் ஒன்றுக்கு ரூ.225 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்குமாறு கிரித் பாரிக் கமிட்டி கூறியுள்ளது.
இது குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர்களின் கூட்டம் வரும் ஜூன் 7ம் தேதி நடக்கிறது.
அதில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்காக அளிக்கும் மானியத்தைக் குறைப்பது ஆகியவை குறித்து இறுதி முடிவெடு்க்கப்படவுள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும் என்று தெரிறது. மேலும் கேஸ், மண்ணெண்ணெய் விலையும் உயரக் கூடும்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications