ஜெயலலிதா 24ம் தேதி திருப்பதி கோவிலில் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 24ம் தேதி திருப்பதி சென்று வழிபாடு நடத்தவுள்ளார்.

ஜெயலலிதா கடந்த 17 ந்தேதி காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று ருத்ரா பிஷேக சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நாளை மறுதினம் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இது குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரி கூறுகையில்,

வருகிற 24 ந் தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு திருப்பதி நகராட்சி மைதானத்தில் உள்ள தளத்தில் இறங்குகிறார்.

அங்கிருந்து திருமலைக்கு காரில் செல்கிறார். அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

பிறகு ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் முடித்து பிற்பகல் 1 மணிக்கு காரில் புறப்பட்டு திருப்பதி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார்.

ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+