பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் துவக்கம்!
Subscribe to Oneindia Tamil

கடந்த 34 நாட்களாக நடந்துவந்த 3 ஜி ஏலம் மே 19-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை கேபினட் செயலர் கே எம் சந்திரசேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஏலத்தில் ரூ 67719 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ரூ 25000 கோடி கிடைக்கும் என்றுதான் அரசு எதிர்ப்பார்த்தது.
இந்நிலையில், அடுத்து வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கான ஏலம் திங்கள் கிழமை துவங்குகிறது. இந்த ஏலத்துக்கான குழுவில் கேஎம் சந்திரசேகர், தொலைத்தொடர்பு செயலர் பிஜே தாமஸ், நிதித் துறைச்செயலர் அசோக் சாவ்லா மற்றும் திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா பிள்ளை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications