திமுக அரசு சமதர்மத்துடன் செயல்படுகிறது - கி.வீரமணி
தென்காசி: திமுக அரசு சமதர்மத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
குற்றாலத்தில் நான்கு நாட்கள் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நேற்று நிறைவு பெற்றது
இதில் கலந்து கொண்டு கி.வீரமணி பேசுகையில், திமுக அரசு சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்க கூடாது என்ற நோக்கத்தில் முதல்வர் கருணாநிதி 22 லட்சம் கான்கீரிட் வீடுகளை 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
திமுக அரசு சமதர்மம அரசாக விளங்குகிறது. எதிர்கட்சிகள் அரசை என்ன குறை சொல்வது என தெரியாமல் தேடி அலைந்து வருகின்றன. சேதுசமுத்திர திட்டத்தை ஆதரித்த ஜெயலலிதா திடீர் பல்டி அடித்து விட்டார். சுப்பிரமணியசாமி, சோ ஆகியோரும் திமுக அரசுக்கு பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகதான் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் வழக்கம்போல் பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம் தொடரும். என்னால்தான் இத்திட்டம் வந்தது என்று கூறிய வைகோ தற்போது சேது சமுத்திர திட்டத்தை மறந்து விட்டார் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications