விமான விபத்து-மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட உடல்!

Subscribe to Oneindia Tamil

மங்களூர்: மங்களூர் விமான விபத்தில் இறந்தவரின் உடலை அடையாளம் தெரியாமல் வாங்கிச்சென்ற உறவினர்கள் இறுதிச்சடங்கு நடைபெறும் போது உண்மை தெரிந்ததால் அந்த உடலை மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 158 பேர் பலியாகியுள்ளர். இதில் 22 உடல்கள் மட்டும் இன்னும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கரிக்கட்டையாகிவிட்டன. இவர்களது டிஎன்ஏ மாதிரிகள் ஹைதரபாத் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 22 பேரில் 20 பேர் ஆண்கள் என்றும், ஒருவர் பெண் என்றும், இன்னொன்று குழந்தையின் உடல் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனாலும் ஹைதரபாத் ஆய்வக முடிவு வந்தால் தான் அவரை யாருடைய உடல்கள் என்பது அடையாளம் காண முடியும்.

இந் நிலையில் ஒரு உடலுக்கு 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதனால் டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறிவிட்டனர்.

அதேபோல உடலை மாற்றி வாங்கிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. மங்களூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டிசோசா (49) விமான விபத்தில் இறந்துவிட்டார்.

இவரது உறவினர்கள் மங்களூர் அரசு வென்லாக் மருத்துவமனையில் இருந்த ஒரு உடலைக் காட்டி அது இக்னேஷியஸ் டிசோசாதான் என்று கூறி வாங்கிச் சென்றனர்.

டிசோசாவின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போதுதான் அது இஸ்லாமியர் ஒருவரின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இறுதிச் சடங்குகளை பாதியில் நிறுத்திவிட்டு, அந்த உடலை மருத்துவமனையில் கொண்டு வந்து திருப்பிச் சேர்த்தனர்.

உயிர் தப்பியவர்களுக்கு ஏர் இந்தியா வேலை:

இந் நிலையில் இந்த விபத்தில் உயிர் தப்பிய 8 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்க ஏர் இந்தியா நிறுவனம் முன் வந்துள்ளது. அவர்கள் விரும்பினால் பணியில் சேரலாம் என்று அறிவித்துள்ளது.

அதே போல பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை நஷ்டஈடு தரப்படும் என்று விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.

பிராங்பர்ட் கொண்டு செல்லப்பட்ட பைலட் உடல்:

இதற்கிடையே விபத்தில் பலியான பைலட் ஸ்லாட்கோ க்ளுசிகாவி்ன் (53) உடல் ஏர் இந்தியா விமானம் மூலம் பிராங்பர்ட் கொண்டு செல்லப்பட்டது.

செர்பியாவின் பெல்கிரேட் நகரைச் சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 2 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணியாற்றி வந்தார்.

பிராங்பர்ட்டில் இருந்து அவரது உடல் செர்பியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+