எம்.எல்.சியாகவே தொடர மாயாவதி முடிவு-வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
லக்னெள: முதல்வர் பதவியில் தொடர மீண்டும் எம்எல்சியாகிவிட மாயாவதி முடிவு செய்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்வரான மாயாவதி மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்து வருகிறார். இவருடைய எம்.எல்.சி. பதவி காலம் ஜூலை 6ம் தேதி முடிவடைகிறது.
இந்த இடத்திற்கும் மேலும் 12 எம்.எல்.சி. பதவிகளுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந் நிலையில் மாயாவதி மீண்டும் மேலவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். மக்களிடையே தனது பலத்தை நிரூபிக்க அவர் ஏதாவது ஒரு எம்எல்ஏவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்டது.
ஆனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரஸ் பலத்த போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் தேர்தலை தவிர்த்துவிட்டு பாதுகாப்பாக எம்எல்சியாகிவிட முடிவு செய்துவிட்டார்.
இதற்காக இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications