இலங்கை சுற்றுலா-எச்சரிக்கையை திரும்பப் பெற்ற அமெரிக்கா!
கொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பாதுகாப்பு அதிகரித்துள்ளதால், தனது நாட்டுப் பயணிகளுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பெரீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இறுதி கட்ட போர், பெருமளவிலான தமிழர் படுகொலைகளுடன் முடிந்தது. அதன் பிறகு இலங்கை அரசு புலிகளை ஒடுக்கி விட்டதாகவும். தங்கள் நாடு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீண்டு விட்டதாகவும் சர்வதேச நாடுகளுக்கு அறிவித்தது.
இந்நிலையில் ஒராண்டு காலமாக புலிகளின் தாக்குதல் எதுவும் இலங்கையில் நடைபெறாததால், இலங்கைக்கு சுற்றுலா செல்ல அமெரிக்க மக்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது. இதனால் தங்கள் நாட்டின் சுற்றுலா துறை வளர்ச்சி பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications