3 மாதத்தில் 5 கோடி லேப்டாப்கள் விற்பனை!
மும்பை: கடந்த ஜனவரி-மார்ச் மாத காலகட்டத்தில், உலகம் முழுவதும் 4.94 கோடி லேப்டாப்கள் விற்பனையாகியுள்ளன.
இது 43.4 சதவீத வளர்ச்சியாகும். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லேப்டாப் விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும் மினி-நோட்புக் எனப்படும் சிறிய வகை லேப்டாப்கள் தான் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இந்த வகை கம்ப்யூட்டர்களின் விற்பனை, சென்ற ஆண்டைவிட 71 சதவீதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் லேப்டாப்கள் விற்பனையில் எச்.பி. நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 94 லட்சம் லேப்டாப்களை விற்பனை செய்துள்ளது. அதாவது உலகளவில் விற்பனையான லேப்டாப்களில் 19.2 சதவீதம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே.
ஏசர் நிறுவனம் 91 லட்சம் லேப்டாப்களையும், டெல் 56 லட்சம் லேப்டாப்களையும் விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் லேப்டாப்களின் விலை 16 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. உலக அளவில் லேப்டாப்களின் சந்தை சுமார் ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications