பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை ஊழியர் கைது
டெல்லி: இந்திய கடற்படை ரகசியங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சந்த் குமார் பிரசாத் (24) என்ற கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இவர் மும்பையில் உள்ள கடற்படையின் விமானப் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய கடற்படையின் விமானங்கள், ஏவுகணைகள் குறித்த ரகசியங்களை உளவு பார்த்து மற்றொரு நபர் மூலமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்துக்கு அளித்து வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து விமானப் படையின் ரகசியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணுவ முகாமின் வரைபடம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை இன்னொரு நபர் மூலமாக பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்ப காத்திருந்தபோது சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications