ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆதாரங்கள் சேகரிப்பு-சிபிஐ இயக்குனர்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆதாரங்களை திரட்டி வருவதாக சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிபிஐ வசம் நிலுவையில் உள்ள 2,000 வழக்குகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
நாடு முழுவதும் கூடுதலாக 71 சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் 3 நீதிமன்றங்கள் சென்னையில் அமைக்கப்படும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்:
இந நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும், அமைச்சர் ராசாவை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து அதிமுக சார்பில் இன்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக மருத்துவர் அணித் தலைவர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய
மைத்ரேயன்,
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications