ரயில் தாக்குதல்-இரட்டை குழந்தைகளுடன் பலியான தம்பதி: ப.சி-ராணுவ தளபதி சந்திப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நக்ஸலைட்டுகள் சதியால் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 110த்தைத் தாண்டிவிட்டது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 300 மேல் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மேற்கு மித்னாபூர் மாவட்டம் ஜர்கிராம் என்ற இடத்தில் கெம்சோலி- சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் ஒரு பகுதியை நக்ஸலைட்டுகள் அகற்றியதால்
ஹெளராவில் இருந்து மும்பைக்கு வந்த லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கவிழ்ந்தது.
பக்கத்து தண்டவாளத்தில் விழுந்த இந்த ரயிலின் 13 பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியது. இந்த கொடூர விபத்தில் 110க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகளும் அடக்கம்.
மாவோயிஸ்டுகள் போஸ்டர்:
இந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு மாவோயிஸ்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு விட்டுச் சென்றிருந்த 2 போஸ்டர்கள் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.
அதில், "மேற்கு மித்னாபூர், புருலியா, பங்குரா ஆகிய பகுதிகளில் இருந்து கூட்டு பாதுகாப்புப் படை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் மறுப்பு:
ஆனால், ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பில்லை என மாவோயிஸ்டுகளின் அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் கமிட்டி (பிசிபிஏ) கூறியுள்ளது.
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசித் மஹதோ ஒரு செய்தி நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்தார்.
அவjfடம், சம்பவ இடத்தில் இருந்து போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டது குறித்து கேட்டபோது, "நாங்கள்தான் செய்தோம் என எங்கள் பெயரை வேறு யாராவது குறிப்பிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. இந்த சதியை யார் செய்தது என்பதைக் கண்டுபிடிப்பது போலீஸாரின் பணி'' என்றார்.
இரட்டை குழந்தைகளுடன் பலியான பெற்றோர்:
இந்த சம்பவத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாவித், தனது மனைவி சபியா மற்றும் 7 வயதான இரட்டை பெண் குழந்தைகளுடன் பலியாகியுள்ளார்.
நசுக்கிக் கிடந்த ஒரு பெட்டியை மீட்புக் குழுவினர் வெட்டி உள்ளே புகுந்து பார்த்தபோது அங்கு ஜாவித், சபியா ஆகியோர் இறந்து கிடந்தனர். அருகே 2 பெண் குழந்தைகள் உடல் நசுங்கி பிணமாகக் கிடந்தனர். இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும்போதே அழுதுவிட்டனர்.
விடுமுறைக்காக முதல் முறையாக மும்பைக்கு சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் இருவரும் 2ம் வகுப்பு படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவில் ரயில்கள் இனி ஓடாது?:
இதற்கிடையே மாவோயிஸ்டுகள் அதிகளவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஒரிஸ்ஸா, பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் வழியே இரவு நேரங்களில் ரயில்கள் இயக்கத்தை நிறுத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) விவேக் சகாய் கூறியுள்ளார்.
சிதம்பரத்துடன் ராணுவத் தளபதி சந்திப்பு:
இந் நிலையில் ராணுவத் தளபதி வி.கே.சிங் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து நக்ஸல்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.
அப்போது மாநில போலீசாருக்கு போர் முறைகள் குறித்து ராணுவம் பயிற்சியளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது நக்ஸல்களின் 2வது தாக்குதல்:
இந்த மாதத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 17ம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பஸ் ஒன்றை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் போலீஸ் உயர் அதிகாரிகள் 12 பேர் உள்பட 36 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications