கும்மிடிப்பூண்டி-ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை!
கும்மிடிப்பூண்டி: ஓய்வுபெற்ற சென்னை சப்-இன்ஸ்பெக்டர் கும்மிடிப்பூண்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நீலகண்டன் (59), சிஐடி பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இன்று காலை 11.45 மணியளவில் கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்துக்கு வந்த அவர் கருவூலத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் நீலகண்டனை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, மார்பு, தலையில் வெட்டு விழுந் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இதையடுத்து கொலைக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. பட்டப்பகலில் கருவூலத்துறை அலுவலகம் அருகே நடந்த இந்தக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகண்டனுக்கு கும்மிடிப்பூண்டி அருகே நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக தகராறு உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications