தேனி...வீடுகளில் பெண்களை குறி வைத்து தாக்கும் மர்ம நபர்!
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில், நள்ளிரவில் பெண்களை குறி வைத்து மர்ம நபர் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கீழ கூடலூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரியம்மாள் (30).
இவர் இரு தினங்களுக்கு முன் தன் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் மாரியம்மாளை கம்பியால் தலையில் தாக்கியுள்ளான்.
மாரியம்மாள் கூச்சல் போடவே, கணவர் மணிகண்டன் ஓடி வந்துள்ளார். அவரை தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடி விட்டான்.
இந் நிலையில் கூடலூர் இடையர் தெருவை சேர்ந்த லீலாவதி (39). இவர் வராண்டாவிலும், மகன் ஆனந்த சரவணன் வீட்டுக்குள்ளும் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த மர்ம நபர், லீலாவதியை கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இந்தத் தாக்குதல்களில் படுகாயமடைந்த மாரியம்மாள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் , லீலாவதி கம்பம் அரசு மருத்துவமனையிலும் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications