சிவகாசி: 2 வயது குழந்தையை கொன்று புதைத்த சிறுவன்!

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: இரண்டு வயது குழந்தையைக் கொன்று புதைத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிவகாசி அருகே குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த கணேசன்-அழகம்மாள் தம்பதியின் மகன் ஜோதி சங்கரன் (வயது 2). தனது உறவினரான சத்திவீரனின்( 15) வீட்டில் குழந்தையை தந்துவிட்டு கணேசனும் அழகம்மாளும் வேலைக்குச் சென்றனர்.

இந்நிலையில், சத்திவீரன் அந்தக் குழந்தையைக் கொன்று தனது வீட்டில் கட்டப்பட்டு வரும் பாத்ரூமில் புதைத்தது தெரியவந்தது.

போலீசார் அவனைக் கைது செய்து, குழந்தையின் உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், லீசார் உள்நோக்கத்துடன் செயல்பட்டு சத்திவீரனை‌ கைது செய்ததாகக் கூறி அவரது உறவினர்கள் விருதுநர்-சிவகாசி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருப்பினும் குழந்தையை சத்திவீரன் தான் கொலை செய்தான் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அவன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

எனது அம்மாவுக்கும், குழந்தையின் அப்பா கணேசனுக்கும் கள்ளக்காதல் இருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இதுபற்றி குழந்தையின் தாய் அழகம்மாளிடம் இதுபற்றி சொன்னேன். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கணேசனையும், அழகம்மாளையும் பழிவாங்க வேண்டும் என்று ஜோதி சங்கரை தீர்த்துக் கட்டினேன்.

இறந்ததும் வீ்டடுக்கு பக்கத்தில் கட்டப்பட்டு பாத்ரூமில் குழி தோண்டிப் புதைத்தேன் என்று கூறியுள்ளான்.

சத்திவீரன் கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடன் படித்த அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவனை அடித்து கொலை செய்துள்ளான். அந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் அவன் குழந்தையைக் கொன்றுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+