ஆண் குழந்தை ரூ.1 லட்சம்-பெண் குழந்தை ரூ.20,000: கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து விசாரணை

இந்தக் கும்பல் ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000க்கும் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒசூர் விசாரணையில் கிடைத்த துப்பு...
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெறுவதற்காக பஸ்சில் வந்த ராமாத்தாள் என்பவரின் 3 மாத குழந்தையை, உடன் பயணித்த ஒரு பெண் கடத்திச் சென்றார்.
இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த தனலெட்சுமி, சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா, அவரது மனைவி கிரிஜா, இவர்களது கூட்டாளி ராணி ஆகியோரை கைது செய்தனர்.
சிக்கிய மதபோதகர்கள்...
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படப்பையைச் சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் (48), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் (44) ஆகிய மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ராமாத்தாளின் 3 மாத கைக்குழந்தையும் மற்றும் 3 வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.
முக்கிய புள்ளி கிரிஜா...
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கிரிஜா தான் முக்கிய புள்ளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தங்கள் காவலில் எடுத்த போலீசார் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மனித உரிமை அமைப்பு லலிதா...
அப்போது கிரிஜா கொடுத்த தகவலின்பேரில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டையைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணும் நேற்று முன்தினம் பிடிபட்டார். இவர் தனது குழந்தை கடத்தல் தொழிலை மூடிமறைக்க அகில இந்திய மனித உரிமைகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வந்துள்ளார்.
இந்தக் கும்பல் இதுவரை மொத்தம் 9 குழந்தைகளை கிருஷ்ணகிரி மற்றும் காவேரிபட்டிணம் பகுதிகளில் இருந்து கடத்தி சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி, செஞ்சியில் விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை விலை...
சென்னை பெரம்பூரில் 2 குழந்தைகளையும், புதுச்சேரியில் 3 குழந்தைகளையும், பண்ருட்டியில் 2 குழந்தைகளையும், செஞ்சியில் ஒரு குழந்தையையும் விற்றுள்ளனர்.
இதில் 6 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் அடக்கம்.
ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000 முதல் ரூ.80,000க்கும் விற்பனை செய்துள்ளனர்.
இந்தக் கும்பலிடமிருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே கிரிஜாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் ஸ்டாப்கள், பஸ் ஸ்டாண்டுகளில் குழந்தைகளை வைத்து பஸ்சுக்காக காத்து நிற்கும் பெண்களுக்கு உதவுவது போல நடித்து தான் இந்தக் கும்பல் குழந்தைகளை கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னணியில் பெரும் கும்பல்?...
இந்தக் குழந்தை கடத்தல் பின்னணியில் மேலும் பெரிய கும்பல் இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அடுத்ததாக கிருஷ்ணகிரி தனலெட்சுமியையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications