மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம்-புத்ததேவ் புறக்கணிப்பு
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி கூட்டணி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸிடம் படுதோல்வியடைந்துள்ள நிலையில், அது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடக்கிறது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி செல்லப் போவதில்லை. கொல்கத்தாவில் தான் இருப்பேன் என்று நேற்றே செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துவிட்டார்.
இதன்மூலம் கட்சியின் மேலிட உத்தரவை அவர் புறக்கணித்துள்ளார்.
முன்னதாக 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியிடம் கம்யூனிஸ்ட் கட்சி தோல்விடைந்ததையடுத்து நடத்தப்பட்ட பொலிட்பீரோ கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் நாளயும் நடக்கும் இக் கூட்டத்தில், மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்த முக்கியமான ஆலோசனை நடப்பதால், இதில் அவர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சி தலைமை அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், கட்சியின் கட்டளையை நிராகரித்த அவர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருப்பதால், மாநிலத்திலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது என்று கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பிவிட்டார்.
பதவி விலக முடிவு?:
இதனால் கட்சித் தலைமை அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
இந் நிலையில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரணாபும் விலக விருப்பம்:
இதற்கிடையே மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடைந்துள்ளதால், மத்திய நிதியமைச்சர் பதவிலிருந்து விலக விரும்புவதாக அம் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜியும் சோனியா காந்தியிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தனது ராஜினாமா ஏற்கப்படாது என்ற தைரியத்தில் பிரணாப் போடும் நாடகம் இது என்றெ பலரும் கருதுகின்றனர்.