ஜூன் 10 ம் தேதி திமுகவில் இணைய உள்ளேன்-கரூர் சின்னசாமி பேட்டி
கரூரில் இன்று அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் 10ம் தேதி அன்று கரூரில் இருந்து அதிமுக, உள்ளாட்சி பிரநிதிகள், மாற்றுக் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சிறு தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமுக சேவர்கள் என சுமார் 10,000 பேர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான டாக்டர் கருணாநிதி முன்னிலையில் இணைய உள்ளோம்.
கரூர் மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர்.
அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. அதிமுகவை 'மன்னார்குடி வகையாறா' அதிகார மையம் ஆட்டிப் படைக்கிறது. சுருக்கமாக சொன்னால் ஜெயலலிதா ஒரு கைதியைப் போல் உள்ளார்.
திமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட முதல்வரையும், துணை முதல்வரையும் எளிதில் சந்திக்க முடிக்கிறது. திமுக தான் உண்மையான ஜனநாயக கட்சி.
திமுகவின் அணுகுமுறை நன்றாக உள்ளது. நான் திமுகவில் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் தலைவர் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என்றார்.
அட!