பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த மே 18ம் தேதி துறைத் தலைவரான பேராசிரியர் மாதவன் (54) தன்னை அழைத்ததாகவும், துறை அறையில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர், பதிவாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்தை ஏதும் எடுக்கவில்லை. இதனால்தான் கால தாமதமாக போலீஸை அணுகியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார் நேஹா.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், திருவான்மியூரில் உள்ள மாதவனின் வீட்டிற்குச் சென்று அங்கு வைத்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேராசிரியர் மாதவன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications