காதலி மர்ம மரணம் - கோவா அமைச்சர் தலைமறைவானார்
பனாஜி: கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோவின் காதலி நாடியா எலி விஷத்தைக் குடித்து உயிரிழந்தார். இதையடுத்து பிரான்சிஸ்கோ தலைமறைவாகி விட்டார்.
தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்கோ. இவரது காதலி நாடியா. சில தினங்களுக்கு முன்பு நாடியா எலி விஷத்தைக் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னைக்குக்கொண்டு வரப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பிரான்சிஸ்கோவிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் சரத் பவார் உத்தரவிடவே அவரும் விலகினார். தற்போது பிரான்சிஸ்கோ தலைமறைவாகி விட்டார்.குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராவதற்கு முன்பு பிரான்சிஸ்கோ
விரைவில் அவர் போலீஸ் முன்பு ஆஜரவார் என்றும் இது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications