தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் மீண்டும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை 693 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். தப்பி ஓட முயன்ற மீனவர்களை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அந்தோணி பிச்சை, இருதய ராஜ் உட்பட 3 மீனவர்கள் படு காயம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து கரையை நோக்கி திரும்பியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications