மே. வங்க ரயில் தகர்ப்பு சம்பவம் - நக்சல் ஆதரவு அமைப்பு தலைவர் கைது
ஜார்கிராம் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில், கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை மாவோயிஸ்டுகள் தகர்த்த சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்ட் ஆதரவு, போலீஸ் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவர் சமீர் மஹதோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மே 28ம் தேதி ஜார்கிராம் பகுதியில், தண்டவாளத்தை தகர்த்து கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை தகர்த்தனர் நக்சலைட்கள். இதில் 148 பேர் கொல்லப்பட்னர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரயிலின் 13 பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டன.
இந்த சம்பவத்திற்கு மாவோயிஸ்ட் ஆதரவு, போலீஸ் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் கமிட்டியே காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த மனோரஞ்சன் மஹதோ, ரகால் பாரிக், ரபீந்திர மஹதோ, போனாமலி மஹதோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அதன் தலைவர் சமீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு ரயில்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. முன்பு கொல்கத்தா-புவனேஸ்வர் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலையும் இந்த அமைப்பினர் கடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications