தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை வெறித் தனமாகதாக்கி விரட்டியுள்ளது இலங்கை கடற்படை. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியிலும்,கொதிப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு வாக்கில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படை வெறியர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கிகளைக் காட்டிமிரட்டியஅவர்கள் மீனவர்களையும் தாக்கினர். இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளை நோக்கி திருப்பி ஓடினர். அப்போதும் விடாமல் இலங்கைக் கடற்படையினர் தனுஷ்கோடி வரை துரத்தி வந்தனர்.

இந்த தாக்குதலின்போது 2 படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படை காடையர்கள் பறித்துக் கொண்டனர்.

இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கியதோடு,தனுஷ்கோடி வரை துரத்தும் அளவுக்கு இலங்கை கடற்படை வெறியர்களுக்கு தைரியம் வந்திருப்பதும், அவர்களைத் தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லாததும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+