சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிடித்து எரிந்த வேன்!

மொரீஷியசில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்திறங்கியது.
இதையடுத்து அந்த விமானத்தில் உள்ள பயணிகளின் லக்கேஜுகளை ஏற்றுவதற்காக வேன் ஒன்று ஓடுபாதை அருகே சென்று நின்றது.
அப்போது அந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து டிரைவர் இறங்கி ஓடியதால் உயிர் தப்பினார்.
5 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து தீயை அணைத்தன. ஆனால், அதற்குள் அந்த வேன் முழுவதுமாக எரிந்து போய்விட்டது.
மொரீஷியஸ் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த விமானத்தை 30 நிமிடம் தாமதமாக தரையிறங்குமாறு தரைக் கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் சென்னை வான் பரப்பில் 30 நிமிடங்கள் வட்டமடித்தது.
வேனில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அது ஓடு பாதையை விட்டு தூரமாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் தான் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே வேன் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேனின் டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருன்றனர். இந்த தீ விபத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையம்...வெளியே செல்ல மறுத்த பயணி:
இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வாலிபர், வெளியே செல்ல மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசியை சேர்ந்தவர் யுவராஜ் (25) சிங்கப்பூரில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் தனது உடமைகளை பெற்றுக்கொண்ட அவர், விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அங்கேயே இருக்கப்
போவதாகக் கூறினார்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியும் அவர் எதையும் கூறவில்லை.
சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்த அவர், வெளியே சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்றார்.
இதையடுத்து, விமான நிலைய மேலாளர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள யுவராஜின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின்னர் அவர்களிடம் யுவராஜை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications