அமெரிக்க நபர் சரமாரியாக சுட்டதில் 4 பெண்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
ஹியாலா (தெற்கு புளோரிடா): அமெரிக்காவில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். மேலும், 3 பெண்களையும் அந்த நபர் சரமாரியாக சுட்டார்.
தெற்கு புளோரிடாவின் ஹியாலா நகரில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே இச்சம்பவம் நடந்தது. நான்கு பெண்களையும் சுட்டுக் கொன்ற பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
38 வயதான அந்த நபரின் பெயர் ஜெரார்டோ ரெகாலடோ. பெண்களை மட்டும் இவர் சுட்டுக்கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவரால் சுடப்பட்டு மேலும் 3 பெண்கள் காயமடைந்து உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க பேஸ்பால் வீரரான ஹெர்னாண்டஸ் என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் இந்த ஜெரார்டோ என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications