சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு -தனி கோர்ட் விசாரணை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன ஊழல் வழக்கு விசாரணை தனி கோர்ட்டில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்ளிட்டோர் செய்தரூ. 10,000 கோடி ஊழல் வெளியானதைத் தொடர்ந்து ராமலிங்க ராஜு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை இரண்டாக பிரித்துள்ளனர். ராமலிங்க ராஜுவுக்கு மஞ்சள் காமாலை இருப்பதால் அவர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல இன்னொருவரான ராம் மைனாம்பதி அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால் அங்கு வசித்து வருகிறார். இதையடுத்து இந்த இருவர் தொடர்பான வழக்கை தனியாக பிரித்துள்ளனர்.

இதுதவிர முன்னாள் இயக்குநர்கள் 11 பேர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நேற்று பொருளாதார குற்றத் தடுப்பு கோர்ட் முன்பு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. வழக்கை பின்னர் ஜூலை 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நேற்றைய விசாரணையின்போது ராஜு சார்பிலும், மைனாம்பதி சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகினர். உடல்நலக்குறைவு காரணமாக, ராஜு கடந்த செப்டம்பர் மாதம் முதலே கோர்ட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+