கோவையில் ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்திய வக்கீல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர்களை சொந்த பூமியில் மீண்டும் வாழ விடாமல் மெத்தனமாக ஈடுபடுவதாக கூறி ராஜபக்சேவின் கொடும்பாவியை கோவையில் வக்கீல்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
ராஜபக்சேவின் இந்திய பயணத்தை நேற்று முன்தினம்தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்பு, ரயில் மறியல் உள்ளிட்டவை நடந்தன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவையில் இன்று ராஜபக்சே உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கோவையில் கூடிய வக்கீல்கள், தமிழர்கள் சொந்த பூமியில் வாழ வழி வகை செய்யாமல் மெத்தனமாக ராஜபக்சே செயல்படுவதாக கூறி கொடும்பாவியை எரித்தனர்.












Click it and Unblock the Notifications