சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது

முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் நிதீஷ்குமாரின் பெயரை பெருமளவில் கெடுக்கும் வகையிலான விளம்பரமாக இதைப் பார்க்கிறது ஐக்கிய ஜனதாதளம். குறிப்பாக நிதீஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நிதீஷ்குமாருக்கு பகிரங்கமாக சவால் விடும்வகையில், நிதீஷ்குமாருடன் தான் கை கோர்த்தபடி நிற்கும் புகைப்படம் அடங்கிய குஜராத் மாநில அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரத்தை பீகார் செய்தித் தாள்கள் அனைத்திலும் இன்று முழப்பக்க அளவில் வெளியிட்டு மோதலை முற்றச் செய்துள்ளார் நரேந்திர மோடி.
பாட்னாவிலிருந்து வெளியாகும் அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. இது நிதீஷ் குமாரை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
பீகாரில் நடந்த கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் நரேந்திர மோடியை பிரசாரத்திற்கு வரக் கூடாது என தடை போட்டவர் நிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தனது அனுமதியைப் பெறாமல் தன்னுடன் மோடி நிற்பது போன்ற விளம்பரத்தை மோடி அரசு வெளியிட்டிருப்பதால் நிதீஷ் குமார் கடும் கோபமடைந்துள்ளார்.
ஆனால் இந்த விளம்பரத்திற்கு நாங்கள் காரணமல்ல, விளம்பர நிறுவனம்தான் இதை வடிவமைத்தது என்று மோடி அரசு விளக்கம் கூறியுள்ளது. ஆனால் அதை நம்ப நிதீஷ் தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications